பிரபலங்களின் இறுதி வசனங்கள்
பெருந்தலைவர் காமராஜர் | தன் உதவியாளரிடம் , ” வைரவா ! விளக்கை அணைத்துவிடு ! “. |
காந்தி | காந்தி இறக்கும்போது ‘ ஹே ராம் ! ‘ என்றார் . |
ஜூலியஸ் சீஸர் | யூ டூ புரூட்டஸ் ? ‘ என்றார் |
கலிகுலா ( ரோம் ராஜ்ஜியத்தின் கொடுங்கோலன் ) | தன்னைக் கத்தியால் குத்திய பாதுகாவலர்களிடம் சொன்னான் , ” நான் இன்னும் இறக்கவில்லை ! “ |
தாமஸ் ஆல்வா எடிசன் : | ” விளக்கை எரியவிடுங்கள் . என் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும் ! “ |
பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் : | ” இறக்கும் மனிதனால் எதையும் எளிதாகச் செய்ய முடியாது ! “ |
பாபர் ( மொகலாயப் பேரரசர் ) : | தன் மகன் ஹுமாயூனிடம் …. ” இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே ! ” என்றார் |
ஜுல்ஃபிகர் அலி புட்டோ ( பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ) : | ” இறைவா …..நான் ஒரு குற்றமும் செய்யாதவன் ! “ |
டயானா : | கடவுளே ! என்ன நடந்தது எனக்கு ? |
ஜொன் ஆஃப் ஆர்க் ( பிரெஞ்சுப் புரட்சியாளர் ) | தீயில் எரிந்துகொண்டு இருந்த சமயத்தில் சொன்னது . “ஜீஸஸ்!” |
வால்டேர் | தூக்கு தண்டனைக்கு முன் ‘ சாத்தானை உன்னிடம் இருந்து துரத்திவிடு ‘ என்று சொன்ன பாதிரியாரிடம் , ” எதிரிகளை உருவாக்கிக்கொள்வதர்கான நேரம் இது அல்ல ! “ |
கிளியோபாட்ரா | பூ நாகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு , ” ஆஹா… இதோ … என் முடிவு இங்கே இருக்கிறது ! “ |
பீத்தோவன் | ” நண்பர்களே கை தட்டுங்கள்… இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது ! “ |
ஆன் ( இங்கிலாந்து ராணி ) | தன் உதவியாளரிடம் , ” மக்களின் நன்மைக்காக கருவூலப் பணத்தை பயன்படுத்துங்கள் ! “ |
நெப்போலியன் | ஃபிரான்ஸ் … ஆர்மி…ஜோஸஃபின் ! |
மேரி க்யூரி | என்னைத் தனிமையில் இருக்க விடுங்கள் ! |
வின்ஸ்டன் சர்ச்சில் | எனக்கு எல்லாமே போர் அடிக்குது ! ” இந்த வார்த்தைகளுக்குப் பின் கோமாவுக்குச் சென்று , ஒன்பது நாட்களுக்குப் பின் மரணத்தைத் தழுவினார் |
- ஏதேனும் முக்கிய தகவல் விடுபட்டிருப்பின் studyforce.in@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவவும் அல்லது கீழே கமெண்ட் செய்யவும். இதை உங்கள் நண்பர்களுக்கு Facebook , Google Plus மூலம் பகிரவும்
- இதை PDF கோப்பில் பதிவிறக்கம் செய்ய பிரபலங்களின் இறுதி வசனங்கள் ஐ கிளிக் செய்து பதிவிறக்கலாம்.
If you enjoyed this article, Get email updates (It’s Free)
Leave a Reply